Saturday, December 27, 2008

அடம் பிடிக்கும் புத்தகங்கள்!

திருவிழா. எழுத்தாளர்களுக்கு. வாசகர்களுக்கு. பதிப்பாளர்களுக்கு. விற்பனையாளர்களுக்கு. முக்கியமாக சென்னை மக்களுக்கு.

வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டி வருகிறது. 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் ஆவேன் என்று அடம்பிடித்த பல புத்தகங்கள் காட்சிக்குத் தயாராகிவிட்டன. சில தயாராகிக் கொண்டிருக்கின்றன.

விகடன், கண்ணதாசன், கிழக்கு என்று பல பதிப்பகங்கள் தற்போது தயார் நிலையில். ஒவ்வொரு பதிப்பகமும் தங்களுக்கென்று சில இலக்குகளுடன் களமிறங்க உள்ளனர்.

என்னென்ன புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஆக்ரமிக்கப் போகின்றன என்பதை அடுத்த பதிவி எழுதுகிறேன். தவிரவும், புத்தகக் கண்காட்சி நடைபெறும் தினங்களில் அங்கே நடக்கும் சம்பவங்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத இருக்கிறேன். அவ்வப்போது புத்தக அறிமுகம், எப்போதாவது புத்தக விமரிசனம் எழுதலாம் என்று திட்டம்.

பார்க்கலாம். எவற்றுக்கெல்லாம் நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று?

நாள் : ஜனவரி 8, 2009 முதல் ஜனவரி 18 , 2009 வரை
இடம்: கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திடல்

No comments:

Post a Comment